Tuesday, 12 April 2011

சௌரவ் கங்குலி

சௌரவ் கங்குலி (ஜூலை 081972) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர். இடதுகைத் துடுப்பாளரான கங்குலி 1996 இல் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமானார். தன் முதலிரு போட்டிகளிலும் இங்கிலாந்துக்கு எதிராக சதங்களைப் பெற்றார். 2000முதல் 2005 வரை இந்திய அணியின் தலைவராக இருந்தார். ஒருநாள் போட்டிகளில் பத்தாயிரத்துக்கும் அதிகமான ஓட்டங்களையும் டெஸ்ட் போட்டிகளில் ஐயாயிரத்துக்கும் அதிகமான ஓட்டங்களையும் பெற்றுள்ளார். 2004- ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது கங்குலிக்கு வழங்கப்பட்டது.


எப்போதும் சக வீரர்களை உற்சாகப்படுத்தி,அணியின் வெற்றிக்கு தூண்டுகோலாக இருந்து வந்த சவுரவ் கங்குலி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இன்றுடன் விடைபெறுகிறார்.

வங்கப்புலி, தாதா, கொல்கத்தா இளவரசர் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் கங்குலிக்கு இன்று முக்கியமானதொரு நாள். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இன்றுடன் அவர் ஓய்வு பெறுகிறார்.

கொல்கத்தாவைச் சேர்ந்த 36 வயதாகும் இடது கை பேட்ஸ்மேனான கங்குலி,1992-ல் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக பிரிஸ்பேனில் நடந்த ஒருநாள் போட்டியின் மூல சர்வதேச கிரிக்கெட்டில் கால் தடம் பதித்தார்.

தனது கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டத்தை 1996-ல் அவர் தொடங்கினார். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 112 போட்டிகளில் பங்கேற்று 7127 ரன்களை அவர் குவித்துள்ளார். இதில் 16 சதம், 34 அரை சதம் அடங்கும்.

ஒருநாள் போட்டிகளில், 22 சதம், 72 அரைசதத்துடன் 11,363 ரன்களைத் தொட்டுள்ளார் கங்குலி. இதுதவிர ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 132 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியுள்ளார்.

திறமையை வெளிப்படுத்தி, வெற்றியில் முக்கிய பங்கு வகித்ததால், இந்திய அணியின் கேப்டன் பதவி அவரைத் தேடி வந்தது.

சக வீரர்களை எப்போதும் உற்சாகப்படுத்தி அணியின் வெற்றிக்கு தூண்டுகோலாக இருந்து வந்த சவுரவ் கங்குலி, இந்திய அணிக்கு அதிக வெற்றிகளைத் தேடித் தந்த கேப்டன் என்ற பெருமையும் அதன் மூலம் பெற்றார்.

நாக்பூர் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 4 ஆவது நாளான நேற்று, கடைசி முறையாக பேட்டிங் செய்யக் களமிறங்கிய கங்குலிக்கு ஏமாற்றம் தான் காத்திருந்தது.இதில் அவர் டக்- அவுட் ஆகி வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

மைதானத்தில் உத்வேகத்துடனும், உணர்ச்சி பூர்வமாகவும் விளையாடிய வந்துள்ள கங்குலி, தனது கடைசி நிமிடம் வரை அந்த பாதையில் இருந்து விலகாது ஒரு வெற்றி வீரராகவே திகழ்ந்தார்.

No comments:

Post a Comment