Tuesday, 22 March 2011

கட்டபொம்மனை புறக்கணித்த அரசியல்வாதிகள்

தூத்துக்குடி: சுதந்திரபோராட்ட வீரர் கட்டபொம்மனின் பிறந்த நாளான நேற்று, எந்த அரசியல்வாதியும் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையிலுள்ள அவரது சிலைக்கு மாலையணிவிக்க வரவில்லை. ஆங்கிலேயேர்களை தீரமுடன் எதிர்த்த, சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 252வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில், அவரது நினைவுக்கோட்டையிலுள்ள, அவரது சிலைக்கு, கட்டபொம்மன் வழித்தோன்றல்கள், பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி தலைவி லதா கருணாநிதி, கோட்டை பொறுப்பு அதிகாரி சீனிவாசன் ஆகியோர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். ஆனால், அமைச்சரோ அல்லது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த எந்த ஒரு அரசியல்வாதியோ அல்லது மாவட்ட அரசு அதிகாரிகளோ மாலையணிவிக்க வரவில்லை. இதனால், கட்டபொம்மன் வாரிசுகள், மிகவும் வேதனைப்பட்டனர். அவர்கள் கூறும்போது, ""கட்டபொம்மன் இந்திய மக்களின் விடுதலைக்காக போராடினார். சிறப்புக்குரிய அந்த வீரரது நினைவு தினமாயினும் சரி, பிறந்த தினமாயினும் சரி, எந்த அமைச்சரும், அரசியல்வாதியும் கோட்டைக்கு வருவது கிடையாது. இதுதான், கட்டபொம்மனுக்கு அவர்கள் தரும் மரியாதையா?'' என அவர்கள் கேள்வியெழுப்பினர்.

No comments:

Post a Comment