கலை நயம் உடைய அனைவரையும் கவரும் ஒரு கலையாக கோலம் அமைகிறது. கோலம் இடுதல் ஒரு கலை.
இதில் ஒரு ஆரோக்கிய இரகசியமும் ஒளிந்துள்ளது. கோலம் இடுவதற்காக காலையில் எழுவது உடலுக்கும், மனதிற்கும் நல்லது.
விடியற்காலையில் எழுந்து கோலம் இடும் பழக்கம் ஓசோனிலிருந்து வரும் சுத்தமான காற்று கிடைக்கசெய்கிறது. இடுப்பிற்கும், விரல்களுக்கும் ஒரு பயிற்சியாகிறது.
கோலம் இடுவது ஒரு வகையில் கணக்கு எனலாம். இதனால் நியாபக சக்தி அதிகரிக்க வாய்ப்பாகிறது.
மேலும், கோலம் இடுபவருக்கும் மற்றவருக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது என்றால் மிகையில்லை.
No comments:
Post a Comment